முகப்பு
இந்தியா

100 நாள் வேலைத் திட்டம் ஊதியம் உயர்வு: தமிழகத்துக்கு ரூ.319!

மறுவரையறுக்கப்பட்ட ஊதிய பட்டியலின்படி நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஹரியாணா, சிக்கிம் மாநிலத்துக்கு ரூ. 374 நிர்ணயம்.

Updated On : 28 மார்ச், 2024 at 9:28 AM
பகிர்:
Updated On : 28 மார்ச், 2024 at 9:26 AM

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்துக்கு தற்போது நாளொன்றுக்கு ரூ.294 வழங்கப்பட்டு வரும் நிலையில், ரூ.319-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ஹரியாணா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.374 ஆக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

கோவாவுக்கு ரூ.356, நிக்கோபாருக்கு ரூ.347, அந்தமானுக்கு ரூ.329, புதுச்சேரிக்கு ரூ.319, லட்சத்தீவுக்கு ரூ.315 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளத்துக்கு ரூ.346, ஆந்திரம் மற்றும் தெலங்கானாவுக்கு ரூ.300, கர்நாடகத்துக்கு ரூ.349-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது மத்திய அரசின் அரசாணை விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.