இந்தியா

100 நாள் வேலைத் திட்டம் ஊதியம் உயர்வு: தமிழகத்துக்கு ரூ.319!

மறுவரையறுக்கப்பட்ட ஊதிய பட்டியலின்படி நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஹரியாணா, சிக்கிம் மாநிலத்துக்கு ரூ. 374 நிர்ணயம்.

DIN

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்துக்கு தற்போது நாளொன்றுக்கு ரூ.294 வழங்கப்பட்டு வரும் நிலையில், ரூ.319-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ஹரியாணா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.374 ஆக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோவாவுக்கு ரூ.356, நிக்கோபாருக்கு ரூ.347, அந்தமானுக்கு ரூ.329, புதுச்சேரிக்கு ரூ.319, லட்சத்தீவுக்கு ரூ.315 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளத்துக்கு ரூ.346, ஆந்திரம் மற்றும் தெலங்கானாவுக்கு ரூ.300, கர்நாடகத்துக்கு ரூ.349-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது மத்திய அரசின் அரசாணை விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவு

திருப்பத்தூரில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்

அக்.14, 15-இல் மாணவா்களுக்கு பேச்சாற்றால், படைப்பாற்றல் போட்டிகள்

மாமனாரை தாக்கிய இளைஞா் மீது வழக்கு

மின்தடை தொடா்ந்தால் அதிமுக சாா்பில் போராட்டம்: எம்எல்ஏ அறிவிப்பு

SCROLL FOR NEXT