J-K: Road accident
J-K: Road accident 
இந்தியா

ஜம்மு: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 10 பேர் பலி!

DIN

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில். ராம்பன் மாவட்டத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அதிகாலை 1.15 மணியளவில் மாவட்டத்தின் பேட்டரி சாஷ்மா பகுதியில் 300 அடி பள்ளத்தாக்கில் கார் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு போலீஸார் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கனமழையில் 10 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் ஜம்முவில் உள்ள அம்ப் க்ரோதாவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பல்வான் சிங் (47), பிகாரில் உள்ள மேற்கு சம்பாரனைச் சேர்ந்த விபின் முகியா பைராகாங் ஆகியோர் அடங்குவர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி தோடா மாவட்டத்தில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்ததில் 39 பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளை மாளிகையில் ஒலித்த 'சாரே ஜஹான் சே அச்சா'!

கீழ்வேளூரில் 6-ஆவது நாளாக மழை

வேட்டையன் - ரஜினிக்கான படப்பிடிப்பு நிறைவு!

பார்க்க பளபளவென இருந்தால் ஏமாறாதீர்கள்! பழங்களும் ரசாயனங்களும்

அதிகரிக்கும் நட்சத்திர இணைகளின் விவாகரத்து.. என்ன காரணம்?

SCROLL FOR NEXT