காங்கிரஸில் இணைந்தார் மேயர் கட்வால் விஜயலட்சுமி
ஹைதராபாத் மாநகராட்சி மேயர் கட்வால் விஜயலட்சுமி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஹைதராபாத் மாநகராட்சி மேயர் கட்வால் விஜயலட்சுமி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
முன்னாள் பாரத் ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கேசவ் ராவின் மகள் விஜயலட்சுமி.
கேசவ் ராவ் மற்றும் தெலங்கானா முன்னாள் துணை முதல்வர் கடியம் ஸ்ரீஹரி ஆகியோர் பிஆர்எஸ் கட்சியிலிருந்து வெள்ளிக்கிழமை விலகினர். பிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகிய ராவ், காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதை உறுதி செய்தார்.
மேலும், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது இல்லத்தில் கேசவ் ராவ் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், முதல்வர் ரெவந்த் ரெட்டி மற்றும் அகில இந்தியக் காங்கிரஸ் பொறுப்பாளர் தீபாதாஸ் முன்ஷி ஆகியோர் முன்னிலையில் ஹைதராபாத் மாநகராட்சி மேயர் கட்வால் விஜயலட்சுமி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.