கோப்புப்படம் 
இந்தியா

மகாராஷ்டிரம்-சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்கள் முகாம் முறியடிப்பு, வெடிபொருட்கள் பறிமுதல்

மகாராஷ்டிரா-சத்தீஸ்கர் எல்லையில், சுடின்டோலா கிராமத்திற்கு அருகே, ஆயுதம் ஏந்திய நக்சலைட்கள் சிலர் முகாமிட்டுள்ளதாக...

PTI

கட்சிரோலி: மகாராஷ்டிரம்-சத்தீஸ்கர் எல்லையில் நக்சலைட்டுகளின் முகாமை கட்சிரோலி போலீசார் முறியடித்து, அங்கிருந்து ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் மற்றும் பிற பொருட்களை கைப்பற்றியதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, மகாராஷ்டிரா-சத்தீஸ்கர் எல்லையில், சுடின்டோலா கிராமத்திற்கு அருகே, ஆயுதம் ஏந்திய நக்சலைட்கள் சிலர் முகாமிட்டுள்ளதாக, வெள்ளிக்கிழமை இரவு போலீசாருக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது.

இதயைடுத்து நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான சிறப்புப் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சனிக்கிழமை காலை, நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான சிறப்புப் படையினர் 450 மீட்டர் உயரமுள்ள மலை உச்சியை அடைந்தபோது, அங்கிருந்து நக்சலைட்டுகள் தப்பி ஓடிவிட்டனர்.

மேலும் மலை உச்சியில் ஒரு நக்சல் முகாம் கண்டுபிடிக்கப்பட்டது, மிகவும் கடினமான நிலப்பரப்பு மற்றும் அலை அலையான மலைகளைப் பயன்படுத்தி நக்சலைட்டுகள் அந்த இடத்திலிருந்து தப்பித்ததாகவும், அந்த முகாமில் வைக்கப்பட்டிருந்த டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள், கார்டெக்ஸ் கம்பிகள், பேட்டரிகள், வாக்கி-டாக்கி சார்ஜர்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன, பின்னர் முகாம் அழிக்கப்பட்டது என்று அந்த அதிகாரி கூறினார்.

இதையடுத்து சத்தீஸ்கர் எல்லையில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

கொடைக்கானலில் கபடிப் போட்டி

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

SCROLL FOR NEXT