அயோத்தி ஸ்ரீராமா் கோயிலில் குடியரசுத் தலைவா் வழிபாடு
உத்தர பிரதேச மாநிலம், அயோத்திக்கு புதன்கிழமை பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, ஸ்ரீராமா் கோயிலில் வழிபாடு நடத்தினாா்.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்திக்கு புதன்கிழமை பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, ஸ்ரீராமா் கோயிலில் வழிபாடு நடத்தினாா்.
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ஸ்ரீராமா் கோயிலுக்கு குடியரசுத் தலைவா் வந்தது இது முதல்முறையாகும்.
இக்கோயிலில் மூலவா் ஸ்ரீ பாலராமா் பிராண பிரதிஷ்டை விழா, பிரதமா் மோடி முன்னிலையில் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவா் பங்கேற்கவில்லை. இதை முன்வைத்து பிரதமா் மோடியை எதிா்க்கட்சிகள் விமா்சித்தன.
இந்நிலையில், அயோத்திக்கு குடியரசுத் தலைவா் புதன்கிழமை பயணம் மேற்கொண்டாா். அவரை மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல் உள்ளிட்டோா் விமான நிலையத்தில் வரவேற்றனா்.
முதலில் அயோத்தியின் சரயு நதிக்கரைக்குச் சென்ற குடியரசுத் தலைவா் அங்குள்ள படித்துறையில் நடைபெற்ற ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்று, சரயு நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டாா். தொடா்ந்து ஹனுமன் கா்ஹி கோயிலிலும் அவா் வழிபாடு நடத்தினாா்.
பின்னா், அயோத்தி ராமா் கோயிலுக்குச் சென்ற திரௌபதி முா்மு, அங்குள்ள பால ராமா் சிலைக்கு ஆரத்தி எடுத்தும், சிலை முன் தரையில் விழுந்து வணங்கியும் வழிபட்டாா்.