முகப்பு
இந்தியா

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

Updated On : 8 மே, 2024 at 4:02 AM
சோனியா காந்தி(கோப்புப்படம்)
பகிர்:

புதுதில்லி: பொய்களையும் வெறுப்பையும் பரப்புவோரை நிராகரிக்குமாறு மக்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

பொய்களையும் வெறுப்பையும் பரப்புவோரை மக்கள் நிராகரிக்க வேண்டும். நம் அனைவரின் ஒளிமயமான, சமத்துவம் மிக்க எதிர்காலத்தை உருவாக்க காங்கிரஸýக்கு வாக்களியுங்கள். வாக்குப்பதிவு இயந்திரத்தில் கை சின்னத்துக்கான பொத்தானை அழுத்தி வலுவான, ஒருமித்த இந்தியாவைக் கட்டமைப்போம்.

Advertisement

தற்போதைய ஆட்சியில் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தலித்துகள், ஆதிவாசிகள், சிறுபான்மை இனத்தவர் ஆகியோருக்கு எதிரான பாகுபாடு ஆகியவை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளன.

இந்தச் சவால்கள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் நோக்கம், கொள்கை ஆகியவற்றில் இருந்து எழுகின்றன. அவர்கள் ஆட்சியையே நோக்கமாகக் கொண்டுள்ளனர்; அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, பேச்சுவார்த்தை ஆகியவற்றை அவர்கள் நிராகிக்கின்றனர்.

நமது ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் ஆகியவற்றின் பார்வை, அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. நமது ஏழைகளின் பிரச்னைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை.

இன்று, உங்கள் ஆதரவை மீண்டும் கோருகிறேன். எங்கள் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள், தேசத்தை ஒன்றிணைப்பதையும், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்காக உழைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க காங்கிரஸýம், இந்தியா கூட்டணிக் கட்சிகளும் உறுதிபூண்டுள்ளன என்று விடியோ பதிவில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.