முகப்பு
இந்தியா

பேருந்தில் தீ: 4 வாக்கு இயந்திரங்கள் நாசம்!

பாதிக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் மீண்டும் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On : 8 மே, 2024 at 7:06 AM
- DOTCOM
பகிர்:

மத்திய பிரதேசத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 வாக்குப் பெட்டிகள் நாசமாகின.

மேலும், வாகனத்தில் பயணித்த தேர்தல் அலுவலர்கள், காவலர்கள் மற்றும் ஓட்டுநர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பேதுல் மாவட்ட ஆட்சியர் நரேந்திர சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநில பேதுல் மக்களவைத் தொகுதிக்கு ஏற்கெனவே வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில், முல்தாய் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கெளலா பகுதியில் இருந்து வாக்குகள் பதிவான இயந்திரங்கள் பேருந்தின் மூலம் வாக்குகள் எண்ணும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போது கோலா கிரமத்துக்கு அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது இரவு 11 மணியளவில் திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. பேருந்தில் இருந்த தேர்தல் அலுவலர்கள், காவலர்கள் மற்றும் ஓட்டுநர் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்ட நிலையில், 275 முதல் 280 வரையிலான பூத்துகளில் பதிவான 4 வாக்குச் சாவடிகளின் இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமாகியது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விரிவான அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டு, பாதிக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் மீண்டும் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.