தேர்தல் நடத்தை விதி அமல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் பெட்டி!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெறப்படும் பெட்டி குறித்து...
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, மக்கள் மனுக்களை அளிப்பதற்கு, மனுக்கள் பெறப்படும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன.
இதனால், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்த போஸ்டர்கள், பேனர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டுள்ளன.
Advertisement
இதன் காரணமாக, பொதுமக்கள் அவர்களது கோரிக்கை மனுக்களை தபால் மூலமாகமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் வரவேற்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள மக்கள் குறைதீர்வு மனுக்கள் பெறும் பெட்டியில் மனுக்களை செலுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் மனுக்கள் பெறப்படும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
மனுக்களை அளிக்க வரும் பொதுமக்கள், அவர்களது மனுக்களை அந்தப் பெட்டியில் இட்டுச் செல்லலாம். அதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு புகார் பெட்டி நிறைந்தவுடன், அவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
இந்தப் பெட்டியில் பெறப்படும் மனுக்களை அதிகாரிகள் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.