கோப்புப் படம் 
இந்தியா

மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லி மருத்துவமனைகளில் வெடிகுண்டு பரபரப்பு!

DIN

தில்லியில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சில நாள்களுக்கு முன்பாக நாட்டின் தலைநகரில் 150-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புராரி மருத்துவமனை மற்றும் சஞ்சய் காந்தி மருத்துவமனை நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இது குறித்து காவல்துறை உதவி ஆணையர் எம்.கே.மீனா, “புராரி மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. உள்ளூர் காவல்துறை, வெடிகுண்டு சோதனை பிரிவு மற்றும் மோப்ப நாய்கள் அந்த இடத்துக்கு விரைந்துள்ளன. மருத்துவமனையை சோதனையிட்டு வருகிறோம். சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் காந்தி மருத்துவமனையிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானங்கள் ரத்து: 4 ஆய்வாளா்களை பணியிடை நீக்கம் செய்து டிஜிசிஏ நடவடிக்கை

தேநீா், சிற்றுண்டி, மதிய உணவு வழங்க சுயஉதவிக் குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆக்கிரமிப்பின் பிடியில் 1,068 ஹெக்டோ் ரயில்வே நிலம்: நாடாளுமன்றத்தில் தகவல்

தயக்கம் வேண்டாம்!

2-ஆவது நாளாக பங்குச் சந்தையில் முன்னேற்றம்

SCROLL FOR NEXT