கோப்புப் படம் 
இந்தியா

சிக்கிமில் மின்சார விநியோகத்தை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

சிக்கிமின் மின்சார வலுவாக்கம்: ADB நிதியுதவி

DIN

புதுதில்லி: சிக்கிமில் மின்சார விநியோகத்தின் தரம் மற்றும் பின்னடைவை நவீனப்படுத்தவும், ஆசிய வளர்ச்சி வங்கி 148.5 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டம் சிக்கிமின் அனைவருக்கும் மின்சாரம் என்ற முயற்சியை முழுமையாக ஆதரிக்கிறது. அதே வேளையில் வீடுகள், தொழில்கள், வணிகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலையான மின்சாரத்தை 24 மணி நேரமும் தடையின்றி வழங்க உறுதி செய்கிறது என்று ஆசிய வளர்ச்சி வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தில் சிக்கிமின் மின் விநியோக முறையை சுமார் 770 கிலோமீட்டர் வரை நவீனப்படுத்தப்படும். கூடுதலாக, மின் விநியோக நெட்வொர்க் திறனை அதிகரிக்க 580 கிலோமீட்டர் வரையான பழைய மற்றும் குறைந்த திறன் கொண்ட வெற்று கடத்திகளை முற்றிலும் புதியவற்றுடன் மாற்றும் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள 26 மின் துணை நிலையங்களை மேம்படுத்தப்படும் வேளையில், அதில் மேற்பார்வைக் கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்தும் அமைப்பை நிறுவுதல், தொலைதூர பகுதிகளில் 15,000 பொது தெரு விளக்குகள் நிறுவுதல் மற்றும் 28 கிராமங்களில் மின்சார பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

கூடுதலாக 24 ஆரம்ப சுகாதார துணை மையங்களில் சூரிய ஆற்றல் அமைப்புகள் மற்றும் ஆற்றல் திறன் கொண்ட மின் உபகரணங்களை நிறுவி, கிராமப்புற சுகாதார வசதிகளின் திறனை மேம்படுத்தி, குறிப்பாக குளிர்கால மாதங்களில் உள்நோயாளிகளுக்கு இது சிகிச்சையளிக்கும்.

இந்தத் திட்டமானது, சுயஉதவி குழுக்கள், உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் தனிப்பட்ட தொழில்களை உள்ளடக்கிய குறைந்தபட்ச 1,100 பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுதல் மற்றும் அவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்

SCROLL FOR NEXT