ஜெ.பி. நட்டா 
இந்தியா

பெண்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் மோடி: ஜெ.பி. நட்டா

பெண்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி என்றார் ஜெ.பி. நட்டா.

DIN

பெண்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி என பாஜக தேசிய செயலாலர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.

ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் பாஜக மகளிரணி சார்பில் நடைபெற்ற மாநாட்டில் அவர்,

''நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியவர் பிரதமர் மோடி. முதல் வெளியுறவுத் துறை பெண் அமைச்சரை நியமித்தது மோடிதான். அதோடு மட்டுமின்றி பாதுகாப்புத் துறையிலும் நிதித்துறையிலும் முதல்முறை பெண்ணை நியமித்த பெருமையும் மோடியையே சேரும்.

அவர், பெண்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கியுள்ளார். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10 கோடி பெண்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கியுள்ளார். இது பெண்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பல பெண்களுக்கு நுரையீரல் சார்ந்து எழும் பிரச்னைகள் குறைந்துள்ளன'' எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT