இந்தியா

ஹரியாணா: பஸ் விபத்தில் 7 பேர் பலி

ஹரியாணாவில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 7 பேர் பலியாகினர்.

DIN

ஹரியானா மாநிலம் அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை மினி பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியாகினர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்கு யாத்திரை சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து அம்பாலா மருத்துவமனையின் மருத்துவர் கௌஷல் குமார் கூறுகையில், ''அம்பாலா-தில்லி-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்'' என்றார்.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT