இந்தியா

ஹரியாணா: பஸ் விபத்தில் 7 பேர் பலி

ஹரியாணாவில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 7 பேர் பலியாகினர்.

DIN

ஹரியானா மாநிலம் அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை மினி பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியாகினர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்கு யாத்திரை சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து அம்பாலா மருத்துவமனையின் மருத்துவர் கௌஷல் குமார் கூறுகையில், ''அம்பாலா-தில்லி-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்'' என்றார்.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT