மணிப்பூரில் வெள்ளம்: 1.8 லட்சம் மக்கள் பாதிப்பு
மணிப்பூர் வெள்ளத்தினால் 1.8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு
ரீமெல் புயலுக்குப் பிறகு இடைவிடாது பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து மணிப்பூரில் 1.8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் இதுவரை கிடைத்த தகவலின்படி, சுமார் 1.8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,265 வரையிலான வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும், 18 ஆயிரம் பேர் வெள்ள அபாயப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும், சுமார் 401 ஹெக்டேர் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 18 இடங்களில் ஆற்றின் கரைகள் உடைக்கப்பட்டன என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மணிப்பூர் வெள்ள நிகழ்வினை அறிந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் மணிப்பூர் மக்களுக்கு உதவிகள் வழங்குமாறு கேட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.