தீப்பற்றி எரியும் மிக்-29 போர் விமானம்  
இந்தியா

ஆக்ரா அருகே மிக்-29 போர் விமானம் விபத்து!

ஆக்ரா அருகே இந்திய விமானப் படையின் மிக்-29 போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.

DIN

உத்தர பிரதேசம் ஆக்ரா அருகே இந்திய விமானப் படையின் மிக்-29 போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார்.

ரஷிய தயாரிப்பு மிக் 29 ரக விமானங்கள் விமானப் படையில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே சோங்கா கிராமத்தில் மிக் 29 ரக போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.

அப்போது விமானி துரிதமாக செயல்பட்டு பாராசூட் மூலமாக உயிர் தப்பினார்.

முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் ராஜஸ்தான் பகுதியில் இதே மிக் 29 ரக விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இரு மாதங்களில் நடக்கும் 2-வது விபத்து இதுவாகும்.

பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விமானம் ஆக்ரா அருகே தீப்பிடித்து எரிந்ததாகவும் இதில் விமானி உயிர் தப்பியதாகவும் மேலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT