கோப்புப் படம் 
இந்தியா

கடன் தொல்லையால் கணவர் தற்கொலை! மனைவி, குழந்தைகளுக்கு சிகிச்சை!

பிகாரில் கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை; குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

DIN

பிகாரில் கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்த நிலையில், குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிகாரின் பாங்கா மாவட்டத்தில் கன்ஹையா மஹாதோ என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக, சில வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார். ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அழுத்தமும், தொடர் நிதி நெருக்கடியும் மஹோதாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

இதற்கிடையே, தங்களால் கடன்பட்ட வாழ்க்கையை வாழ இயலாது என்று கூறிய, மஹோதாவும் அவரது மனைவியும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, தங்களுடைய 3 குழந்தைகளையும் தற்கொலைக்கு உள்ளாக்க முற்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை (நவ. 16) அதிகாலையில் அவர்கள் 5 பேரும் விஷமருந்தியுள்ளனர். இதனிடையே, மஹோதாவின் மகள், தங்களின் உறவினர் ஒருவருக்கு மொபைல் போனில் அனைத்து விவரங்களையும் அதிகாலையில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மஹோதாவின் வீட்டை அடைந்த உறவினர், அவர்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இருப்பினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மஹோதா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தர். மேலும், அவரது மனைவியும் 3 குழந்தைகளும் தொடர் சிகிச்சையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மருத்துவமனையில் அனுமதி!

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

எஸ்ஐஆர் படிவம்! முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும் நிராகரிக்கப்படாது: அர்ச்சனா பட்நாயக்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே புதிய பாடல்!

முதல் டி20: ஹாரி டெக்டார் அரைசதம் விளாசல்; வங்கதேசத்துக்கு 182 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT