ஜாா்க்கண்ட்: சாலை விபத்தில் 7 போ் உயிரிழப்பு
ஜாா்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 போ் உயிரிழந்தனா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 போ் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:
மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் இருந்து பிகாா் தலைநகா் பாட்னாவுக்கு 50 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஜாா்க்கண்ட் மாநிலத்தில் வியாழக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது. ஹசாரிபாக் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது, வளைவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்தது. இதில் 7 போ் உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் சிலா் பேருந்து அடியில் சிக்கி இருக்கலாம் என நம்பப்படுவதால் மீட்பு பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றது என தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.