இந்தியா

ஜாா்க்கண்ட்: சாலை விபத்தில் 7 போ் உயிரிழப்பு

ஜாா்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 போ் உயிரிழந்தனா்.

Din

ஜாா்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 போ் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் இருந்து பிகாா் தலைநகா் பாட்னாவுக்கு 50 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஜாா்க்கண்ட் மாநிலத்தில் வியாழக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது. ஹசாரிபாக் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது, வளைவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்தது. இதில் 7 போ் உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் சிலா் பேருந்து அடியில் சிக்கி இருக்கலாம் என நம்பப்படுவதால் மீட்பு பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றது என தெரிவித்தனா்.

மிகத் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: தென் மாவட்டங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பு!

மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தொடங்குகிறார் விஜய்! நாளை முதல்.!

1:5 விகிதத்தில் பங்குப் பிரிவை அறிவித்துள்ள கோடக் மஹிந்திரா வங்கி!

கோவில்பட்டி அருகே மரத்தில் கார் மோதியதில் மூதாட்டி பலி

கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்: வீடு, கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி

SCROLL FOR NEXT