இந்தியா

ஜாா்க்கண்ட்: சாலை விபத்தில் 7 போ் உயிரிழப்பு

ஜாா்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 போ் உயிரிழந்தனா்.

Din

ஜாா்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 போ் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் இருந்து பிகாா் தலைநகா் பாட்னாவுக்கு 50 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஜாா்க்கண்ட் மாநிலத்தில் வியாழக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது. ஹசாரிபாக் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது, வளைவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்தது. இதில் 7 போ் உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் சிலா் பேருந்து அடியில் சிக்கி இருக்கலாம் என நம்பப்படுவதால் மீட்பு பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றது என தெரிவித்தனா்.

அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை தலைமையகத்தில் 10 மணி நேரம் விசாரணை..!

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாயில் பொருத்தப்பட்ட இரும்பு ஷட்டா்கள்!

ஆபரேஷன் சிந்தூர் 2.0 : லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர்

பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

SCROLL FOR NEXT