முகப்பு
இந்தியா

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி..

Updated On : 22 நவம்பர், 2024 at 6:18 AM
மணிப்பூரில் நிலநடுக்கம்
பகிர்:

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,

விஷ்ணுபூரின் இம்பாலில் இன்று அதிகாலை 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என போலீஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 4:42 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.64 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 93.83 டிகிரி கிழக்கே தீர்க்கரேகையுடன் 10 கிமீ ஆழத்தில் விஷ்ணுபூர் பகுதியில் மையம் கொண்டிருந்தது. இதன் நீளம் 93.83 ஆகவும், ஆழம் 10 கி.மீட்டராகவும் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் திடிரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →