வாக்கு எண்ணிக்கையில் பணியாளர்கள் 
இந்தியா

ராஜஸ்தான் இடைத்தேர்தல்: சமநிலையாக செல்லும் முன்னிலை!

மொத்தம் 7 தொகுதிகளில் 3 கட்சிகளும் தலா 2 தொகுதிகள் வீதம் 6 தொகுதிகளும், ஒரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளரும் முன்னிலை

DIN

ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட 7 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தானில் 7 தொகுதிகளில் 5 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், ராம்கர் மற்றும் சலும்பர் தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் காலமானதாலும், அந்த 7 தொகுதிகளிலும் நவ. 13 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

தியோலி-உன்னியாரா, கின்வ்ஸார், ராம்கர், தௌசா, சலும்பர், சோரசி, ஜுன்ஜுனு ஆகிய 7 தொகுதிகளிலும் சனிக்கிழமை (நவ. 23) காலை 8 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

காலை 10.30 மணி நிலவரப்படி

தியோலி-உன்னியாரா, கின்வ்ஸார் - பாஜக

ராம்கர், தவுசா - காங்கிரஸ்

சலும்பர், சோரசி - பாரத ஆதிவாசி கட்சி

ஜுன்ஜுனு - சுயேட்சை வேட்பாளர்

ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடைபெற்ற நவ. 13 ஆம் தேதியிலேயே மேற்கு வங்கத்தில் 6, அஸ்ஸாமில் 5, பிகாரில் 4, கா்நாடகத்தில் 3, மத்திய பிரதேசம், சிக்கிமில் தலா 2, கேரளம், சத்தீஸ்கா், மேகாலயம், குஜராத்தில் தலா ஒரு தொகுதி என 33 பேரவை தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.

மகாராஷ்டிரத்தில் உள்ள நாந்தேட் மக்களவை தொகுதிக்கும், உத்தர பிரதேசத்தில் 9, பஞ்சாபில் 4, உத்தரகண்ட் மற்றும் கேரளத்தில் தலா ஒரு தொகுதி என 15 பேரவை தொகுதிகளுக்கும் கடந்த நவம்பா் 20-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT