மகாராஷ்டிரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், பந்தாராவிலிருந்து அரசுப் பேருந்து 36 பயணிகளுடன் காண்டியா மாவட்டத்திற்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் புறப்பட்டது.
பேருந்து சதகர்ஜுனி வட்டத்திற்கு உட்பட்ட தவ்வா கிராமத்தில் வந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 9 பயணிகள் பலியானார்கள்.
25 பேர் காயமடைந்தனர். தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.