மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!
2025 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரத்தில் 41 புலிகள் உயிரிழந்தது குறித்து...
மகாராஷ்டிர மாநிலத்தில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் பல்வேறு காரணங்களால் 41 புலிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அம்மாநில வனத்துறை அமைச்சர் கணேஷ் நாயக், வேட்டை, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 41 புலிகள் உயிரிழந்ததாகக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டில் 28 புலிகள் இயற்கையான காரணங்களாலும், 8 புலிகள் விபத்துகளிலும், 4 புலிகள் மின்சாரம் பாய்ந்தும், 1 புலி மட்டும் வேட்டையிலும் உயிரிழந்துள்ளன.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், விலங்குகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிர அரசின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், வனவிலங்குகள் பாதிப்படைவதைக் குறைப்பதற்காக வனப் பகுதி வழியாகச் செல்லும் ரயில்கள் 40 கி.மீ. வேகத்தை கடைப்பிடிக்க வேண்டுமென ரயில்வே துறைக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
In the state of Maharashtra, it is reported that 41 tigers died due to various reasons in 2025 alone.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.