Photo Credit: ANI 
இந்தியா

அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கைத்துப்பாக்கிகள் பறிமுதல்

அமிர்தசரஸில் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

DIN

அமிர்தசரஸில் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள நூர்பூர் பத்ரியில் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிநவீன கைத்துப்பாக்கிகளை பஞ்சாப் காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 2 பேரைக் அவர்கள் கைது செய்துள்ளனர்.

ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக மற்றொரு நபருக்காக காத்திருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தார்.

தாம்பரத்தில் மின்சார ரயில்கள் சேவை நிறுத்தம்

கைது செய்யப்பட்டவர்கள் அமிர்தசரஸின் கவுலோவால் கிராமத்தைச் சேர்ந்த ஜக்ஜித் சிங் மற்றும் குர்விந்தர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டிஜிபி யாதவ் கூறுகையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் கனரக ஆயுதங்கள் கடத்துவதில் சிலர் ஈடுபட்டது போலீஸ் குழுக்களுக்கு உளவுத்துறை மூலம் தெரிய வந்தது.

விரைந்து செயல்பட்ட போலீஸ் குழுக்கள் பொறி வைத்து ஜக்ஜித் சிங், குர்விந்தர் சிங் ஆகியோரை கைது செய்தனர்.

இதில் தொடர்புடைய முக்கிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரைப் பிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT