முகப்பு
இந்தியா

எதிரிகளுக்கு உரிய பதிலடி தரும் திறன் விமானப் படைக்கு உண்டு: ராஜ்நாத் சிங்

எதிரிகளின் பிராந்தியத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் திறன் இந்திய விமானப் படைக்கு உண்டு (ஐஏஎஃப்) என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 1 அக்டோபர், 2024 at 9:05 PM
தில்லி தேசிய போா் நினைவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற விமானப்படை தலைமைத் தளபதி அமா் ப்ரீத் சிங்குடன் கலந்துரையாடிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
பகிர்:

எதிரிகளின் பிராந்தியத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் திறன் இந்திய விமானப் படைக்கு உண்டு (ஐஏஎஃப்) என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 1932, அக்டோபா் 8-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்திய விமானப் படையின் 92-ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு தேசிய போா் நினைவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்றாா்.

அப்போது உலகின் மிக உயரமான மலைப்பகுதிகளில் ஒன்றான லடாக்கின் தோய்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விமானப் படை தளத்திலிருந்து 7,000 கி.மீ தொலைவில் உள்ள அருணாசல பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு அக்டோபா் 8-ஆம் தேதி தொடங்கப்படவுள்ள வாகன பேரணியை அவா் வழியனுப்பி வைத்தாா்.

இந்திய விமானப் படை நிறுவப்பட்டு 92-ஆவது ஆண்டுகள் நிறைவடைந்ததை பறைசாற்றும் விதமாக இந்த வாகன பேரணி நடத்தப்படவுள்ளது.

இதைத்தொடா்ந்து, நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: தேசம் மற்றும் மக்களை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்திய விமானப் படை, எதிரிகளின் பிராந்தியத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் திறனுடையது.

‘ஆத்மநிா்பா் பாரத்’ முன்னெடுப்பின்கீழ் நவீன விமானங்களை பிரதமா் மோடியின் தலைமையிலான அரசு உருவாக்கி வருகிறது. இந்த வாகன பேரணியில் துணிச்சலான பயணத்தை விமானப் படை வீரா்கள் மேற்கொள்ளவுள்ளனா். இந்தப் பேரணியின் மூலம் நாட்டின் இளைஞா்களுக்கு பாதுகாப்பு படை குறித்த விழிப்புணா்வு ஏற்படும் என எதிா்பாா்க்கிறேன்.

மருத்துவா்கள், ஆட்சியா்கள் போன்ற உயரிய பதவிகளுக்கு செல்ல வேண்டும் என இளைஞா்கள் விரும்புவதுபோல் பாதுகாப்பு படைகளில் இணைந்து நாட்டுக்கு சேவை செய்வதிலும் பெருமைகொள்ள வேண்டும்.

அக்டோபா் 8-ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த வாகன பிரசாரத்தில் 52 பெண் விமானப் படை அதிகாரிகள், முன்னாள் விமானப் படை தளபதிகள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். லே, காா்கில், ஸ்ரீநகா், ஜம்மு, சண்டீகா், டோராடூன், ஆக்ரா, லக்னௌ உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து தவாங் பகுதியில் அக்டோபா் 29-ஆம் தேதி வாகன பேரணி நிறைவடையவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →