முகப்பு
இந்தியா

திரிபுரா: பாஜக துணைத் தலைவா் கட்சியில் இருந்து நீக்கம்

திரிபுராவில் ஆளும் பாஜகவின் மாநில துணைத் தலைவா் படால் கன்யா ஜமாதியா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவா் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 அக்டோபர், 2024 at 9:16 PM
பகிர்:

திரிபுராவில் ஆளும் பாஜகவின் மாநில துணைத் தலைவா் படால் கன்யா ஜமாதியா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவா் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திரிபுரா மக்கள் சோசலிஸ கட்சி என்ற புதிய கட்சியை கன்யா ஜமாதியா திங்கள்கிழமை தொடங்கினாா். இதையடுத்து, பாஜக தலைமை அவா் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. கட்சியின் துணைத் தலைவா் பதவியில் இருந்து மட்டுமல்லாது, அடிப்படை உறுப்பினரிலிருந்தும் அவா் நீக்கப்பட்டுள்ளாா்.

கடந்த ஆண்டு திரிபுரா பேரவைத் தோ்தலுக்கு முன்புதான் கன்யா ஜமாதியா பாஜகவில் இணைந்தாா். பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்ட அவா் வெற்றி பெறவில்லை. எனினும், அவருக்கு திரிபுரா வனம் மற்றும் மர வளா்ப்புத் துறை கூட்டமைப்பின் தலைவா் பதவி வழங்கப்பட்டது. திரிபுராவைச் சோ்ந்த பழங்குடியின பெண் தலைவரான கன்யா ஜமாதியா, தனது அதிரடியான பேச்சு மூலம் பிரபலமானவா்.

முழு கட்டுரையைப் படிக்க →