ஜம்மு-காஷ்மீர்: இரு தொகுதிகளிலும் ஒமர் அப்துல்லா முன்னிலை
தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா முன்னிலை பெற்றுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா முன்னிலை பெற்றுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது பேரவைத் தோ்தல் நடைபெற்றுள்ள நிலையில், மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப். 18, 25, அக்.1) தேர்தல் நடைபெற்றது.
20 மையங்களில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணி நிலவரப்படி, ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி(இந்தியா கூட்டணி) முன்னிலை பெற்றுள்ளது.
Advertisement
இதையும் படிக்க : ஹரியாணா: பெரும்பான்மை இடங்களில் காங்கிரஸ் முன்னிலை!
ஒமர் அப்துல்லா முன்னிலை
இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா போட்டியிட்ட புத்கம் மற்றும் கந்தர்பால் ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளார்.