தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் Election Commission of India
இந்தியா

வயநாடு: நவ. 13-ல் வாக்குப்பதிவு!

வயநாடு மக்களவைத் தொகுதியில் நவ. 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தது தேர்தல் ஆணையம்.

DIN

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக். 15) அறிவித்தது.

வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

ரேபரேலி தொகுதி உறுப்பினராக ராகுல் காந்தி தொடரும் நிலையில், அவரின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டுகிறார்.

தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.

இதையும் படிக்க | மகாராஷ்டிர பேரவைக்கு நவ.20-ல் வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்

இரு மக்களவைத் தொகுதிக்குத் தேர்தல்

மகாராஷ்டிரத்துக்கு நவ. 20ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்றும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவ. 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.

இதேபோன்று வயநாடு மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நவ. 13ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்தார்.

மேலும், மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள நான்தேட் மக்களவைத் தொகுதிக்கு நவ. 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT