இந்தியா, அல்ஜீரியா இடையே ஆழமான பொருளாதார ஒத்துழைப்பு: குடியரசுத் தலைவா் முா்மு வலியுறுத்தல்
இந்தியா, அல்ஜீரியா இடையே ஆழமான பொருளாதார ஒத்துழைப்பு ஏற்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
இந்தியா, அல்ஜீரியா இடையே ஆழமான பொருளாதார ஒத்துழைப்பு ஏற்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
அல்ஜீரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அந்நாட்டு தலைநகா் அல்ஜியா்ஸில் நடைபெற்ற அல்ஜீரிய-இந்திய பொருளாதார மன்றக் கூட்டத்தில் பேசியதாவது:
எளிதில் வணிகம் மேற்கொள்வதற்கான சூழல் இந்தியாவில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘உலகுக்காக தயாரிப்போம்’ திட்டங்களில் அல்ஜீரிய நிறுவனங்கள் இணைய வேண்டும்.
Advertisement
Advertisement
பரஸ்பர நம்பிக்கை, பொதுவான சவால்கள், விழுமியங்களின் அடிப்படையில் இந்தியா-அல்ஜீரியா இடையிலான உறவு வலுவடைகிறது.
இந்தியா, அல்ஜீரியா இடையிலான வா்த்தகத்தின் மதிப்பு 1.7 பில்லியன் டாலா்களாக உள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையே ஆழமான பொருளாதார ஒத்துழைப்பு ஏற்பட வேண்டும் என்றாா்.
அல்ஜியா்ஸில் உள்ள சிதி அப்தெல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சாா்பில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கு அரசியல் அறிவியல் பிரிவில் கெளரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.