கோப்புப் படம் 
இந்தியா

சோப்பு டப்பாக்குள் ரூ. 5.5 கோடி?

அஸ்ஸாமில் சோப்பு டப்பாக்குள் வைத்து போதைப்பொருளைக் கடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

DIN

அஸ்ஸாமில் சோப்பு டப்பாக்குள் வைத்து போதைப்பொருளைக் கடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அஸ்ஸாமில் குவஹாட்டி நகரில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமையில் (அக். 18) காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற சந்தீப் சிங், மனோஜ் தேகா என்ற இருவரிடம் சோதனை நடத்தியதில் கடத்தல் செய்யப்படவிருந்த போதைப்பொருள் சிக்கியது.

10 சோப்பு டப்பாக்களில் மறைத்து வைக்கப்பட்டு, கடத்தப்பட்ட 601 கிராம் அளவிலான போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ. 5.5 கோடிக்கும்மேல் இருக்கும் என்றும் தெரிகிறது.

கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்த காவல்துறையினர், இந்த கடத்தல் தொடர்பான விசாரணை நடப்பதாகவும் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT