பாகிஸ்தான் பெண்ணை ஆன்லைனில் மணந்த பாஜக கவுன்சிலரின் மகன்!
இரு நாட்டு அரசியல் பதற்றங்களால் விசா கிடைப்பதில் சிக்கல்
இந்தியாபாகிஸ்தான் பெண்ணை ஆன்லைனில் மணந்த பாஜக கவுன்சிலரின் மகன்!
இரு நாட்டு அரசியல் பதற்றங்களால் விசா கிடைப்பதில் சிக்கல்
பாகிஸ்தானுடனான அரசியல் பதற்றங்களால் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், பாகிஸ்தானிய பெண்ணை ஆன்லைனிலேயே பாஜக கவுன்சிலரின் மகன் திருமணம் செய்தார்.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக கவுன்சிலரான தஹ்சீன் ஷாஹித் என்பவரது மகன் முகமது அப்பாஸ் ஹைதருக்கும், பாகிஸ்தான் லாகூரைச் சேர்ந்த ஆண்ட்லீப் ஜஹ்ரா என்பவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றிருந்தது.
ஆனால் எதிர்பாராதவிதமாக, இரு நாட்டின் இடையே நிலவி வரும் அரசியல் பதற்றங்களால் ஜஹ்ராவுக்கு விசா வழங்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், ஜஹ்ராவின் தாயாரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு, அவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஜஹ்ரா இந்தியாவுக்கு வருவது என்பது இயலாத காரியம் ஆனது. இருப்பினும், ஹைதருக்கு திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்ற ஷாஹித்தின் நிலைப்பாட்டால், ஆன்லைனிலேயே திருமணத்தை நடத்தி விடலாம் என்று கூறினர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!
இதனையடுத்து, ஜஹ்ராவின் குடும்பத்தினரிடமும் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரு வீட்டினரும் குழுமி, இந்த ஆன்லைன் திருமண விழாவை நடத்தி வைத்தனர்.
இந்த திருமண விழாவில் பாஜகவின் எம்.எல்.சி.யான பிரிஜேஷ் சிங் பிரிஷு உள்பட பலரும் கலந்து கொண்டனர். ஜஹ்ராவுக்கு விரைவில் விசா கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த ஹைதர், ஆன்லைனிலேயே அவரை நிக்காஹ் செய்தார்.