காங்கிரஸில் இணைந்தார் தில்லி முன்னாள் அமைச்சர்!
தில்லி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
Updated On : 6 செப்டம்பர், 2024 at 12:40 PM
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி தில்லி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
இதுதொடர்பாக கௌதம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சமூக நீதிக்கான போராட்டத்தை விரைவுபடுத்துவதற்காக ஆம் ஆத்மியின் உறுப்பினர் மற்றும் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜிநாமா செய்கிறேன் என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Updated On : 6 செப்டம்பர், 2024 at 3:03 PM
இதையடுத்து, தில்லி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பால் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
இந்து கடவுள்களுக்கு எதிரான கருத்துக்களால் நிலவிவந்த பிரச்னையையடுத்து, கடந்த 2022ல் கெளதம் சமூக நலத்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
Updated On : 6 செப்டம்பர், 2024 at 3:03 PM
70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி பேரவைக்கு அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.