ஷோபியான் ஆப்பிள் தோட்டத்தில் விவசாயி படம் | பிடிஐ
இந்தியா

ஜம்மு-காஷ்மீா் தேர்தல்: விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.4,000 - காங். வாக்குறுதி!

நிலமில்லா விவசாயிகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படாது என்றும், ஆண்டுதோறும் ரூ. 4,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காங். தேர்தல் அறிக்கை!

DIN

ஜம்மு-காஷ்மீரில் 2014-ஆம் ஆண்டுக்குப் பின், பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது. இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கிய நகர்வாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு வரும் புதன்கிழமை (செப். 18) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல் கட்ட பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமை (செப்.16) நிறைவடைந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின், நடைபெறும் தேர்தல் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக சொந்தமாக நிலம் இல்லாத விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 4,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகரில் இன்று(செப்.16) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா பேசுகையில், சொந்தமாக நிலம் இல்லாத விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ. 4,000 வழங்கப்படும் என்று கூறிய நிலையில், அதன்பின் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை குறித்து அளித்துள்ள விளக்கத்தில், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 4,000 வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றதும் 100 நாள்களுக்குள் சிறுபான்மையினருக்கான ஆணையம் உருவாக்கப்படும் என்றும், ஆப்பிளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு ரூ. 72 நிர்ணயிக்கப்படும், அனைத்து வகையான பயிர்களுக்கும் 100 சதவிகித காப்பீடு வழங்கப்படும் என்று ஸ்ரீநகரில் இன்று(செப்.16) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT