ஜம்மு - காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்புப் படை தேடுதல் நடவடிக்கை
ஜம்மு - காஷ்மீரில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டத்தையடுத்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டத்தையடுத்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், மூன்று சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் குறித்த தகவல்களைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் வேட்டையைத் தொடங்கினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், கனமான முதுகுப்பையைச் சுமந்துகொண்டு, இருளின் மறைவில் வறண்ட ஓடை அருகே செல்வதைக் கண்டதாக தருய் பகுதியின் பேத் காட் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
Advertisement
அவர்களிடம் எந்த ஆயுதங்களும் தென்படாதபோதிலும், அவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் எனச் சந்தேகப்பட்டு, உள்ளூர் காவல் துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் உதவியுடன், சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்காகத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியது.
கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஆனால் இதுவரை சந்தேக நபர்களுடன் எந்தத் தொடர்பும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.