இந்தியா

ராகுலின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

ராகுல் காந்தியின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

காங்கிரஸ் எம்பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எக்ஸ் பதிவு

இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜக தலைவர் ஒருவர் மிரட்டல் விடுத்திருப்பது தொடர்பான ஊடக செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்திரா காந்திக்கு நிகழ்ந்தது தான் ராகுலுக்கும் நடக்கும் என்று பாஜகவினர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

அதேபோல சிவசேனை (ஷிண்டே) எம்எல்ஏ ராகுலின் நாக்கை அறுத்தால் பரிசளிப்பதாக தெரிவித்துள்ளார். எனது சகோதரர் ராகுல் காந்திக்கு பெருகிவரும் மக்கள் ஆதரவு பலரையும் அமைதிப்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியின் பாதுகாப்புக்கு மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும். மேலும், மிரட்டல் மற்றும் வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகை நாள்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு திட்டம்!

மிரட்டல்

முன்னதாக பாஜக தலைவர் தர்விந்தர் சிங் செப்டம்பர் 11 ஆம் தேதி இந்திரா காந்திக்கு நிகழ்ந்தது தான் ராகுலுக்கும் நடக்கும் என்று கூறியிருந்த நிலையில், சிவசேனை( ஷிண்டே) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்டும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துங்கள்'- ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ராகுல் வேண்டுகோள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயா்வு: அமைச்சா் கோவி. செழியன் அறிவிப்பு!

பண மோசடி வழக்குகளில் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி

தனியாா் நிறுவனங்களின் பால் விலை லிட்டா் ரூ.6 வரை உயா்ந்தது

தில்லி பல்கலை. கல்லூரியில் புதிய மாணவா் வசதி மையம்: அடிக்கல் நாட்டினாா் அமைச்சா் ஆஷிஷ் சூட்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.48 கோடி

SCROLL FOR NEXT