ராகுல் காந்தி கோப்புப் படம்
இந்தியா

ராகுல் மீது அவமதிப்பு புகாரளித்த பாஜக!

வெளிநாட்டில் இந்தியாவையும் பிரதமரையும் ராகுல் அவமதித்ததாகக் குற்றச்சாட்டு

DIN

வெளிநாட்டில் இந்தியாவையும், பிரதமரையும் ராகுல் காந்தி அவமதிப்பதாகக் கூறி, ராகுல் மீது பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில், எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி, வெளிநாட்டு மண்ணில் சொந்த நாட்டையும், நாட்டின் பிரதமர் குறித்தும் அவமதிக்கக்கூடிய கருத்துகளை பரப்பி வருகிறார் என்று கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாஜக தலைவர் வி.டி. சர்மா, விஸ்வாஸ் சரங் உள்ளிட்ட பாஜகவினர் போபால் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும், மாநிலத்தில் பல இடங்களில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக தொண்டர்கள், இதேபோன்ற புகார்களை அளித்ததாக வி.டி. சர்மா கூறியுள்ளார்.

இதனையடுத்து, புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான கராத்தே போட்டி: தனியாா் பள்ளி மாணவா்கள் சாதனை

கமுதியில் இரும்பு கடையில் தீ விபத்து

தொண்டியில் போக்குவரத்துப் பணிமனை அமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய பயணிகள் காத்திருப்பு அறையில் செயல்படாத மின்விசிறிகள்

பாஜக இளைஞரணி தலைவா் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT