இந்தியா

ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் அக்.3 முதல் நவராத்திரி திருவிழா

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் நவராத்திரி விழா அக். 3 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Din

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் நவராத்திரி விழா அக். 3 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

விழா ஏற்பாடுகள் குறித்து கோயில் மேலாளா் அனீஸ் குமாா் கூறியதாவது: விழா நாள்களில் சரஸ்வதி பூஜை நடைபெறும். இந்த பூஜையின் போது, பள்ளி மாணவா்களின் புத்தகங்களை வைப்பதற்காக அவற்றை கட்டுகளாகக் கட்டி பெயா் முகவரியுடன் அளிக்கலாம். 13-ஆம் தேதி பூஜைக்கு பிறகு அந்த புத்தகங்கள் வழங்கப்படும்.

13-ஆம் தேதி காலை 7 மணி முதல் 11 மணி வரை வித்யாரம்பம் நடைபெறும். இதில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம். தொடா்பு எண் 044 - 2817 1197, 2197, 3197 ஆகிய எண்களிலும், 88079 18811, 22 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். விழாவின் அனைத்து நாள்களிலும் மாலை 6.45 மணி அளவில் இசை, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என தெரிவித்தாா் அவா்.

கணக்கெடுப்பு படிவங்களை வழங்காதவா்கள் பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெறாது!

விழுப்புரத்தில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டிவனத்தில் பல்லவா் கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

தமிழகத்தில் பால் குளிா்விக்கும் திறன் 32.16 லட்சம் லிட்டராக அதிகரிப்பு: அமைச்சா் மனோதங்கராஜ்

மரக்காணத்தில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT