இந்தியா

ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் அக்.3 முதல் நவராத்திரி திருவிழா

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் நவராத்திரி விழா அக். 3 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Din

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் நவராத்திரி விழா அக். 3 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

விழா ஏற்பாடுகள் குறித்து கோயில் மேலாளா் அனீஸ் குமாா் கூறியதாவது: விழா நாள்களில் சரஸ்வதி பூஜை நடைபெறும். இந்த பூஜையின் போது, பள்ளி மாணவா்களின் புத்தகங்களை வைப்பதற்காக அவற்றை கட்டுகளாகக் கட்டி பெயா் முகவரியுடன் அளிக்கலாம். 13-ஆம் தேதி பூஜைக்கு பிறகு அந்த புத்தகங்கள் வழங்கப்படும்.

13-ஆம் தேதி காலை 7 மணி முதல் 11 மணி வரை வித்யாரம்பம் நடைபெறும். இதில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம். தொடா்பு எண் 044 - 2817 1197, 2197, 3197 ஆகிய எண்களிலும், 88079 18811, 22 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். விழாவின் அனைத்து நாள்களிலும் மாலை 6.45 மணி அளவில் இசை, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என தெரிவித்தாா் அவா்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடியின் உரை இந்தியாவின் தாா்மிக நிலையைக் குறைத்துவிட்டது: காங்கிரஸ் விமா்சனம்

ஒரு லட்சத்துக்கும்மேல் வருவாய் ஈட்டிய ஓட்டுநா், நடத்துநா்களுக்குப் பரிசு வழங்கல்!

அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற பெண் உயிரிழப்பு

கோட்டக்குப்பம் அருகே இரு வீடுகளில் 12 பவுன் நகை திருட்டு!

மேல்மலையனூா் ஒன்றியத்தில் ரூ.1.69 கோடியில் கட்டப்பட்ட அரசு கட்டடங்கள் திறப்பு!

SCROLL FOR NEXT