குஜராத்தில் தடுப்புச்சுவர் மீது பேருந்து மோதல்: 7 பேர் பலி, 14 பேர் காயம்
குஜராத்தில் தடுப்புச்சுவர் மீது மோதிய பேருந்து அடுத்தடுத்து மூன்று வாகனங்களிலும் மோதியதில் 7 பேர் பலியானார்க
குஜராத்தில் தடுப்புச்சுவர் மீது மோதிய பேருந்து அடுத்தடுத்து மூன்று வாகனங்களிலும் மோதியதில் 7 பேர் பலியானார்கள்.
குஜராத் மாநிலம், துவாரகா-கம்பாலியா தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது பேருந்து ஒன்று சனிக்கிழமை மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து அந்த பேருந்து அடுத்தடுத்து மூன்று வாகனங்களிலும் மோதியது. இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.
பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் விநியோகம் செய்தது நிறைவளிக்கிறது- மனோ தங்கராஜ்
14 பேர் காயமடைந்தனர். நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு கம்பாலியா நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Advertisement
Advertisement
காவலர்களின் கூற்றுப்படி, சாலையின் நடுவே கடந்த மாட்டைக் காப்பாற்ற ஓட்டுநர் முயற்சித்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்புச்சுவர் மீது மோதியதோடு இரண்டு கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் மீதும் மோதியதாக தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.