பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!
மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா வாதம் பற்றி...
பாஜக தேசிய தலைவர் தேர்வு தொடர்பாக மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இடையே காரசார வாதம் நிகழ்ந்தது.
மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் விவாதம் செய்து வருகின்றனர்.
சமாஜவாதி கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசும்போது, பாஜக தலைவர் தேர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.
Advertisement
Advertisement
“உலகில் மிகப் பெரிய கட்சியாக கூறிக் கொள்ளும் பாஜகவின் தேசிய தலைவரை இதுவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை” என்று விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த அமித் ஷா, “என் முன்னால் உள்ள அனைத்துக் கட்சிகளும் அவர்களின் தேசியத் தலைவரை சில குடும்ப உறுப்பினர்களை கொண்டு தேர்ந்தெடுப்பார்கள்.
ஆனால், நாங்கள் 12 - 13 கோடி உறுப்பினர்களில் இருந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு சிறிது காலம் எடுக்கும். உங்களுக்கு அதற்கான நேரம் தேவையில்லை. நீங்கள் எப்படியும் அடுத்த 25 ஆண்டுகள் தலைவராக இருப்பீர்கள்” என்று பதிலளித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கும் ஜெ.பி. நட்டாவின் பதவிக் காலம் நிறைவடைந்தும் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படாததால் அவரின் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.