வாரங்கல் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
தெலங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் இன்று விடுக்கப்பட்டது.
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் இன்று விடுக்கப்பட்டது.
இன்று காலை 10 மணியளவில் நீதிமன்றத்திலிருந்து, மிரட்டல் மின்னஞ்சல், குறித்த தகவல் தங்களுக்கு கிடைத்ததாகவும், அது நீதிபதி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். பிறகு காவல் துறையினர் தனி தனி குழுக்களாகவும், வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு மற்றும் மோப்ப நாய் படை ஆகியவற்றுடன் வளாகத்தை முழுமையாக சோதனை செய்ததில், சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றனர். பல மணி நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு!