வெடிபொருள்கள் பறிமுதல் 
இந்தியா

சத்தீஸ்கரில் 22 நக்சல்கள் கைது: வெடிபொருள்கள் பறிமுதல்!

பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் கைது தொடர்பாக..

DIN

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் 21 நக்சல்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று டெக்மெட்லா கிராமத்திற்கு அருகிலுள்ள வனத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது கோப்ரா பிரிவினர் மற்றும் உள்ளூர் காவலர்கள் இணைந்து இந்த பகுதியை சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், ஜங்லா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெல்சார் கிராமத்தில் மேலும் 6 பேரும், அதேநேரத்தில் கண்டகர்கா கிராமத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில் 9 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த இரண்டு நடவடிக்கைகளிலும் பாதுகாப்புப் படையினரின் தனித்தனி கூட்டுக் குழுக்கள் ஈடுபட்டன.

கைது செய்யப்பட்ட நக்சல்களிடமிருந்து டிபன் குண்டுகள், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், மின்சாரக் கம்பிகள், பேட்டரிகள், துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பிற பொருள்கள் மீட்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நக்சலைட்கள் 19 முதல் 45 வயதுக்குள்பட்டவர்கள் ஆவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோ்தல் பிரிவு அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

சாலையோர ஆக்கிரமிப்புகள்: கிராம மக்கள் போராட்டம்

அணுமின் உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

அரசு கடன் பத்திர வழக்கு: கேரள முதல்வருக்கு எதிரான அமலாக்கத் துறை நோட்டீஸுக்குத் தடை - கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு

3,710 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை

SCROLL FOR NEXT