'பயங்கரவாதம் வேண்டாம்; அமைதி வேண்டும்!' - ஜம்மு-காஷ்மீர் மாணவிகள் பேரணி!
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து அனந்த்நாக் அரசுக் கல்லூரி மாணவிகள் பேரணி நடத்திய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து அனந்த்நாக் அரசுக் கல்லூரி மாணவிகள் பேரணி நடத்திய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதுமே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த கொடூரத் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதுமே பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் நேற்று(வியாழக்கிழமை) சம்பவம் நடந்த அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரி மாணவிகள் பேரணி நடத்தினர்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் கையில் பதாகைகளுடன் பேரணியில் ஈடுபட்ட இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது,
பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஜம்மு-காஷ்மீரில் அமைதி வேண்டும் என்று மாணவிகள் கையில் பதாகைகளை வைத்திருந்தனர்.
பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லாமியர்கள் என்றும் அவர்கள் பஹல்காமில் இந்துக்களை மட்டுமே கொன்றதாகவும் சில தவறான தகவல்கள் பரப்பப்படும் நிலையில் இரு மதத்தினரிடையே ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாகவும் இந்த மாணவிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.