முகப்பு
இந்தியா

பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தவர் கைது!

பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகத்தில் விடியோ வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்.

Updated On : 25 ஏப்ரல், 2025 at 6:30 AM
பகிர்:

பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகத்தில் விடியோ வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்.

மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் சைமன் ஷில்லா என்பவர், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகத்தில் விடியோ வெளியிட்டது சர்ச்சையைக் கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்த காவல்துறையினர், அவரது வீட்டையும், இரண்டு மொபைல் போன்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும், ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலும் முகநூலில் சைமன் கருத்துகளைப் பதிவிட்டதால், கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், சைமன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருப்பதாகவும் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →