கோப்புப்படம்.  
இந்தியா

பிகாரில் போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு: 4 பேர் கைது

பிகாரில் போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

DIN

பிகாரில் போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தின் பிதா பகுதியில் உள்ள மைதானம் அருகே சனிக்கிழமை இரவு போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனையின் போது பழைய பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர்.

ஆனால் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றிருக்கிறார்.

மகாராஷ்டிரம்: திருமண நிகழ்வில் மகளை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப் அதிகாரி

உடனே போலீஸார் வாகனத்தைப் பின்தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் அதனை மடக்கிப் பிடித்தனர். அப்போது உள்ளூர்வாசிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வாகனத்தை விடுவிக்க முயன்றனர். அந்த நேரத்தில் போலீஸார் மீது அங்கிருந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர்.

தற்காப்புக்காக போலீஸாரும் பதிலடி கொடுத்தனர்.

இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நிகழ்விடத்துக்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களைக் கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்று போலீஸாரின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT