மக்களவையில் திரிணமூல் காங். எம்.பி.க்கள் தலைவராக மம்தாவின் மருமகன் தேர்வு!
திரிணமூல் காங். மக்களவை தலைவராக அபிஷேக் பானர்ஜி தேர்வு!
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலரும் மக்களவை எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மக்களவையில் அக்கட்சி எம்.பி.க்களை வழிநடத்தும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களின் தலைவராக பதவி வகித்த அக்கட்சியின் மூத்த தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரது பதவி இப்போது அபிஷேக் பானர்ஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற எம்.பி.க்களுடன் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி இன்று(ஆக. 4) மேற்கொண்ட ஆலோசனையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் 28 பேருக்கும் மம்தா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜி தலைவராக இருப்பார்.
Advertisement
Advertisement
Abhishek Banerjee named TMC's Parliamentary leader in Lok Sabha
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.