எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!
சண்டை நிறுத்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு
பாகிஸ்தான் ராணுவம் சண்டை நிறுத்தத்தை மீறி இன்றிரவு எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய ராணுவத்தால் தக்க பதிலடி அளிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்தச் சண்டையில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Pakistan violates ceasefire along LoC in Jammu and Kashmir
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.