முகப்பு
இந்தியா

மாணவர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய தில்லி முதல்வர்!

முதல்வராக பதவியேற்ற பிறகு ரேகா குப்தாவின் முதல் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்..

Updated On : 7 ஆகஸ்ட், 2025 at 6:43 AM
பள்ளி மாணவர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய தில்லி முதல்வர்
பகிர்:

தில்லியைப் பாதுகாப்பதும் அதன் முன்னேற்றத்திற்காக உழைப்பது தனது பொறுப்பு என்று முதல்வர் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஜன சேவா மையத்தில் நடந்த ரக்ஷா பந்தன் நிகழ்வில் முதல்வர் கலந்துகொண்டார். அங்கு அவர் பள்ளி மாணவர்களுடன் ரக்ஷா பந்தன் விழாவைக் கொண்டாடினார்.

பிப்ரவரியில் பதவியேற்ற பிறகு முதல்வர் இந்த விழாவைக் கொண்டாடுவது இதுவே முதல் முறை. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்று முதல்வர் ரேகா குப்தாவுவின் கையில் ராக்கிகளைக் கட்டினார்கள்.

ரக்ஷா பந்தன் என்பது சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பின் பிணைப்பைக் குறிக்கும் ஒரு புனிதமான பண்டிகை என்று முதல்வர் கூறினார்.

முதல்வராக இது எனது முதல் ரக்ஷா பந்தன், இதை நான் குழந்தைகளுடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். தலைநகர் தில்லியைப் பாதுகாப்பதும் அதன் முன்னேற்றத்திற்காக உழைப்பதும் எனது பொறுப்பு என்று அவர் கூறினார்.

summary

Chief Minister Rekha Gupta on Thursday said it is her responsibility to protect Delhi and work for its progress.

முழு கட்டுரையைப் படிக்க →