FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சேதமடைந்த சக்கரத்துடன் தரையிறங்கிய பயிற்சி விமானம்!

புணேவில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது குறித்து...

Updated On : 9 ஆகஸ்ட் 2025, 2:52 pm IST
சேதமடைந்த விமானம்.. - எக்ஸ்
பகிர்:

மகாராஷ்டிர மாநிலத்தின் பாரமதி விமான நிலையத்தில், பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புணே மாவட்டத்தில், ரெட்பேர்ட் விமான பயிற்சி மையத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று, வழக்கமான பயிற்சிகளில், இன்று (ஆக.9) ஈடுபட்டிருந்தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடுவானில் பறந்துக்கொண்டிருந்த அந்த விமானத்தில் ஒரு சக்கரம் சேதமடைந்துள்ளதைக் கவனித்த விமானி, காலை 8 மணியளவில் அவசரமாகத் தரையிறக்க முயன்றுள்ளார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, தரையிறக்கப்பட்டபோது, அதன் முன் சக்கரம் கழன்று ஓடியதால், அந்த விமானம் டாக்ஸிவேவில் இருந்து விலகி, விமான நிலையத்தின் மறுபக்கத்தினுள் நுழைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை எனவும், விமானி பாதுகாப்பாகவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: சுக்மாவில் சிஆர்பிஎஃப் வீரர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய மாணவிகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments