இந்தியா

பெங்களூரில் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் இன்று தொடக்கி வைக்கிறார்!

பெங்களூரில் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது குறித்து....

இணையதளச் செய்திப் பிரிவு

பெங்களூரில் மஞ்சள் தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை இன்று(ஆக. 10) பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கவுள்ளார்.

பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகள் ஊதா மற்றும் பச்சை தடங்களில் வழங்கப்படுகின்றன. இதனிடையே, மூன்றாவதாக மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

ஆர்.வி சாலை ரயில்நிலையம் முதல் பொம்மசந்திரா ரயில்நிலையம் வரையிலான இந்த மஞ்சள் தடத்தில், ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதற்கான ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள், மேற்கு வங்கத்தின் உத்தரபுராவில் உள்ள டாட்டாகர்க் தொழிலகத்தில் இருந்து ஜனவரி மாதம் பெங்களூரு வந்து சோ்ந்தது. முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

எலக்ட்ரானிக் சிட்டி பகுதியுடன் மெட்ரோ ரயில்களை இணைக்கும் நிலையில், பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முதல்கட்டமாக 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படவிருக்கிறது. இதில் 3 ரயில் பெட்டிகள் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது.

8 ஆண்டுகளுக்குப் பிறகு, பெங்களூரில் மக்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மஞ்சள் வழித்தட மெட்ரோ சேவையை பிரதமர் மோடி, இன்று மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கிறார்.

Prime Minister Narendra Modi will inaugurate the driverless metro train service on the Yellow Line in Bengaluru today (Aug. 10).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மந்திரம் போன்றது... ரசிகர்கள் குறித்து அனுபமா நெகிழ்ச்சி!

“அடிமைத்தனத்தைப் பற்றி பேசலாமா?” -இபிஎஸ் மீது முதல்வர் விமர்சனம்!

தேர்தல் ஆணையத்தால் உயிரிழந்தவர்களாக குறிப்பிடப்பட்ட நபர்கள் நேரில் ஆஜர்: உச்ச நீதிமன்றத்தில் அதிர்ச்சி!

பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் நீக்கம்: நிதி அமைச்சகம்

மலையுச்சியின் காற்றாக... சல்மா அருண்!

SCROLL FOR NEXT