பிரதமர் மோடி (கோப்புப்படம்) ANI
இந்தியா

தமிழகத்துக்கு வரவிருந்த ஆலையை குஜராத்துக்கு திருப்பிய மோடி அரசு! காங்கிரஸ்

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஆலைகளை திருப்பிவிடுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்துக்கு வரவிருந்த தொழிற்சாலையை மத்திய அரசு குஜராத்துக்கு திருப்பிவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

ஆந்திரம், ஓடிஸா, பஞ்சாப் மாநிலங்களில் மொத்தம் ரூ. 4,594 கோடி முதலீட்டை ஈா்க்கும் வகையில் 4 குறைமின் கடத்திகள் (சிப்) உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருப்பதாவது:

”நாட்டில் 4 குறைமின் கடத்திகள் உற்பத்தி ஆலைகளை அமைக்க மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தெலுங்கானாவில் விரிவான ஆய்வு செய்த பிறகு, அந்த மாநிலத்தில் ஆலையை அமைக்க ஒரு முன்னணி தனியார் நிறுவனம் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தது. ஆனால், ஆந்திராவில் இந்த ஆலையை அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கெனவே, இதேபோன்று ஆலைகளை வேறு மாநிலங்களுக்கு மாற்ற மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. 2 குறைமின் கடத்தி உற்பத்தி ஆலைகள் தெலங்கானாவில் அமைக்க முன்மொழியப்பட்ட நிலையில், குஜராத்துக்கு மாற்றிவிடப்பட்டது. இதேபோல், தமிழகத்தை முன்மொழிந்த தனியார் நிறுவனத்தை குஜராத்தில் ஆலையை அமைக்க நிபந்தனை விதித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

வேறெதாவது சொல்ல வேண்டுமா? இந்தியாவை வலிமையாக்க மாநிலங்களுக்கு இடையேயான போட்டியைப் பற்றி பிரதமர் பேசுகிறார். ஆனால், ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு, போட்டியை கேலிக்கூத்தாக மாற்றுயிருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Congress General Secretary Jairam Ramesh has alleged that the central government has diverted a factory that was supposed to come to Tamil Nadu to Gujarat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

மாா்ச் 1 முதல் அரக்கோணம் - திருப்பதி மெமு ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்

SCROLL FOR NEXT