கோப்புப்படம் IANS
இந்தியா

3,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆரக்கிள் நிறுவனம்!

ஆரக்கிள் நிறுவனத்தின் பணி நீக்கம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் இந்தியாவில் சுமார் 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், புணே, நொய்டா, கொல்கத்தா ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு 28,824 பேரை புதிதாக பணியில் சேர்த்துள்ளது.

இந்த நிறுவனம் சமீபத்தில் ஓப்பன்ஏஐ(OpenAI) உடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் உயர்நிலை ஆலோசனை நடத்தியது.

இதன்பின்னரே இந்தியாவில் சுமார் 10%, சுமார் 3,000 ஊழியர்களை திடீர் பணிநீக்கம் செய்துள்ளது.

மென்பொருள் மேம்பாடு, கிளவுட் சேவைகள், வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களை இந்த பணி நீக்கம் கடுமையாக பாதித்துள்ளது.

செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானால் ஐடி துறையில் பணி நீக்கங்கள் தொடர்ந்து வருகின்றன.

Oracle Layoff: Nearly 3,000 Jobs Cut in India, Bengaluru, Mumbai Worst Hit Amid AI-Driven Restructuring

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளர்ப்பு நாய்கள் வைத்திருப்போருக்கு... சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!

ஆந்திரம்: குளத்தில் மூழ்கி 6 குழந்தைகள் பலி!

மியான்மரில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

அமித் ஷா மீது தூக்கியெறியப்பட்ட மசோதா நகல்கள்!செய்திகள்: சில வரிகளில் | 20.8.25 | TVKVIJAY | BJP

தவெக மாநாடு! 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்தது... கார் சேதம்!

SCROLL FOR NEXT