கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் புதிதாக 14,000 வாக்குச் சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, ஆக. 29 அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.
அடுத்தாண்டு 294 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தில் 78,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் உள்ள நிலையில், கூடுதலாக 14,000 வாக்குச் சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விவகாரம் குறித்தும், வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு குறித்தும் ஆலோசனை நடத்த, ஆக. 29-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.