தொடர் மழை 
இந்தியா

தில்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை: காலை முதல் தொடர் மழை!

தில்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: தேசிய தலைநகர் புது தில்லிக்கு பலத்த மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை முதலே விடாமல் மழை பெய்து வருகிறது.

புது தில்லியின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தால், நொய்டாவுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் தில்லியின் சில பகுதிகளில் பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், பிற பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தில்லி - நொய்டா நேரடி சாலை மற்றும் மதுரா சாலை, விகாஸ் மார்கம், கீதா காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பதர்பூர் முதல் அஷ்ரம் வரை சாலை முழுக்க வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. காலை முதல் பெய்து வரும் மழையால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஏராளமான போக்குவரத்துக் காவலர்கள் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தானுக்கு உடனடியாக உதவிய இந்தியா: நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு!

‘வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகள் விருது’க்கு விண்ணப்பிக்க அழைப்பு

வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவதற்கு பிரதமா் மோடி நம்பிக்கையை உருவாக்கியுள்ளாா்: பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்

தில்லி திரும்பினார் பிரதமர் மோடி!

ராஜிநாமா செய்த 6 வாரங்களுக்குப் பின் அரசு மாளிகையை காலி செய்த ஜகதீப் தன்கர்!

SCROLL FOR NEXT